Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. வழக்கு: ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல்..!

Siva
வெள்ளி, 19 ஜூலை 2024 (10:00 IST)
மாற்றி அமைக்கப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த சட்டங்களை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறாது.
 
சமீபத்தில் அமலுக்கு வந்துள்ள சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
முன்னதாக  மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் 3 புதிய சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்படுத்தியது. இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
 
மேலும் திமுகவில் உள்பட சில தமிழக அரசியல் கட்சிகளும் காங்கிரஸ் உள்பட தேசிய அரசியல் கட்சிகளும் இந்த புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது என்பதும் இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் இந்த சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments