Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின், உதயநிதி பிரச்சாரத்தை முடித்தவுடன் சபரீசன் செய்யும் வேலை.. திமுகவினர் கலக்கம்..!

Siva
வியாழன், 11 ஏப்ரல் 2024 (15:46 IST)
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி எங்கெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்களோ அவர்கள் பிரச்சாரத்தை கொடுத்தவுடன் அந்த தொகுதிக்கு சபரீசன் சென்று கள ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட இருவரும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து முடித்து விட்ட நிலையில் தற்போது சபரீசன் கள ஆய்வுக்காக தமிழகம் முழுவதும் சென்று வருவதாக கூறப்படுகிறது.

முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்த இடத்தில் திமுகவினர் எப்படி வேலை செய்கின்றனர்? கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு தருகிறதா? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பதை எல்லாம் அவர் நேரடியாக சென்று கணித்து வருகிறாராம்.
இதனால் திமுக நிர்வாகிகள் கலக்கமாக இருப்பதாகவும் தங்களைப் பற்றி ஏதாவது யாராவது போட்டு கொடுத்து விட்டால் தங்கள் பதவிக்கே வேட்டு வந்து விடும் என்றும் பொறுப்பாக பணி செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கொங்கு மண்டலத்தை தான் சபரீசன் முழுமையாக ஆய்வு செய்து வருவதாகவும் அங்கு முழு வெற்றி கிடைக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments