Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் போராட்டத்தில் களமிறங்கிய சரத்குமார்

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (18:05 IST)
தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் சுமார் 50 நாட்களாக விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு குவிந்து வருவதால் போராட்டத்தின் வீரியம் தாங்காமல் ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த போராட்டத்தில் நேரில் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். போராட்டக்காரர்களிடம் தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமின்றி அங்கிருந்த மாசடைந்த தண்ணீரையும் சரத்குமார் குடித்தார்.

இதுகுறித்து சரத்குமார் தனதூ டுவிட்டரில் கூறியதாவது: 48 வது நாளாக நடைபெறும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பிற்கான போராட்டத்தில் இன்று கலந்து கொண்டு எனது ஆதரவை தெரிவித்தேன். மேலும் போராட்டக்களத்தில் குமரெட்டியாபுரம் மக்கள் பயன்படுத்தும் மாசு கலந்த நீரை அருந்தி எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments