Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடராஜன் கவலைக்கிடம்: சசிகலா பரோல் வேண்டி மனு...

Webdunia
ஞாயிறு, 18 மார்ச் 2018 (09:58 IST)
சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இவருக்கு உடலுறுப்பு மாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளது. 
 
நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கணவரை காண பரோல் வேண்டி மனு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

கணவரின் உடல் கவலைக்கிடமாக இருப்பதால் அவரை காண பரோல் வேண்டும் என சசிகலா குறிப்பிட்டுள்ளார். இவரது பரோல் மனு ஏற்கப்படுமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
 
காரணம், சசிகாலாவின் நெருங்கிய உறவினர்களின் மரணத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் இன்னும் 6 மாதங்களுக்கு பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது என்று பரப்பன அக்ரஹார விதிகள் கூறுகிறதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments