Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா குடும்பத்தின் சதி செயலை முன்னதாகவே கூறிய ஜெயலலிதா!

சசிகலா குடும்பத்தின் சதி செயலை முன்னதாகவே கூறிய ஜெயலலிதா!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (15:42 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் எதிர்காலம் குறித்து துக்ளக் இதழ் தலையங்கம் ஒன்று வெளியிட்டுள்ளது.


 
 
சசிகலா பொதுச்செயலாளராக வர இருப்பதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நிர்வாகிகள் சிலர் தான் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிக்க முயற்சி எடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவால் வீட்டை விட்டு துறத்தப்பட்ட சசிகலாவை ஏற்க மறுக்கின்றனர் தொண்டர்கள்.
 
இந்நிலையில் துக்ளக் இதழில் வெளியான தலையங்கத்தில் சசிகலா நடராஜன் குடும்பத்தினர் தனக்கெதிராக சதி செய்தது அம்பலமானதால் ஜெயலலிதா அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினார்.
 
சசிகலா நடராஜன் குடும்பத்தின் சதி பற்றி மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசமியிடம் ஜெயலலிதா கூறியதாகவும் அவர் தனது நண்பர்களிடம் இது குறித்து கூறியதாகவும் துக்ளக் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் தான் அரசியலுக்கு வர மாட்டேன் பதவி ஆசையே இல்லை, அக்காவுக்கு சேவை செய்வதே நோக்கம் என கூறிவிட்டு மீண்டும் போயஸ் கார்டன் வந்த சசிகலா தற்போது அதிமுக பொதுச்செயலாளராக முயற்சி செய்வதை விமர்சித்துள்ளது அந்த தலையங்கம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments