Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சிமுகந்து ஜெயலலிதா என பெயர் வைத்த சசிகலா!

உச்சிமுகந்து ஜெயலலிதா என பெயர் வைத்த சசிகலா!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (17:57 IST)
ஐந்து நாட்கள் பரோலில் வெளியே வந்த சசிகாலா ஜெயலலிதா பாணியில் இரண்டு குழந்தைகளுக்கு இன்று பெயர் வைத்துள்ளார். அதில் ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா என்றே பெயர் வைத்தார்.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தனது கணவர் நடராஜனின் உடல் நிலையை காரணம் காட்டி 5 நாட்கள் அவசர பரோலில் வெளிவந்தார். பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
 
குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை தினமும் வந்து சந்திக்கும் சசிகலாவை பார்க்க ஏராளமான அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிகின்றனர். இந்நிலையில் இன்று அவரை பார்க்க வந்த கூட்டத்தில் தம்பதிகள் இருவர் குழந்தைகளுடன் நின்றதை பார்த்த சசிகலா அவர்களை அழைத்தார்.
 
அவர்களிடம் இருந்து குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக வாங்கி ஜெயலலிதா பாணியில் உச்சிமுகந்து பெயர் வைத்தார். அதில் ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா எனவும், மற்றொரு குழந்தைக்கு ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் பெயரையும் வைத்தார் சசிகலா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments