Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா!!

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (12:28 IST)
2021 ஆம் ஆண்டு தேர்தலுக்காக பணிகள் துவங்கிவிடும் என்பதால் சிறையில் இருந்தவாரே சசிகலா தேர்தல் பணிகள் துவங்கலாம் என முடிவெடுத்துள்ளாராம்
 
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா இன்னும் ஒன்றரை வருடம் சிறையில் இருக்க வேண்டும். அதாவது, 2021 ஆம் ஆண்டு பிப்.14 ஆம் தேதி சசிகலாவில் சிறை தண்டனை முடிவடைகிறது. 
 
அவர் வெளியே வருவதற்குள் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்காக பணிகள் துவங்கிவிடும் என்பதால் சிறையில் இருந்தவாரே சசிகலா தேர்தல் பணிகள் துவங்கலாம் என முடிவெடுத்துள்ளாராம். முதலில் எடப்பாடி பழனிச்சாமியை தன் பக்கம் இழுக்க சசிகலா முயற்சிப்பார் என கூறப்படுகிறது. 
அப்படியில்லையென்றால் பணத்தை இறைத்து முக்கிய ஆட்களை தன் பக்கம் இழுக்க முயற்சிக்க கூடும். ஆனால் இவை அனைத்தையும் தினகரனை மட்டுமே நம்பி சசிகலா செய்ய மாட்டார் எனவும். தனக்கு நெருக்கமான நம்பிக்கையான ஆட்கள் சிலரை இதற்காக நியமிக்க கூடும் என பேசப்படுகிறது. 
 
முக்கியமாக அதிமுக உள்ளாட்சி தேர்தலில் சீட்டு கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள கட்சியினரை குறிவைத்து சசிகலா தனது அரசியல் நகர்வை மேற்கொள்ள கூடும் எனவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments