Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இழுத்தடிக்கும் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தீர்ப்பு!

இழுத்தடிக்கும் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தீர்ப்பு!
, வெள்ளி, 29 ஜனவரி 2021 (14:55 IST)
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேர் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர். 

 
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது.  
 
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக மதுரை மத்திய சிறையில் இருந்து கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. 
 
இதனிடையே வரும் 18 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை வரும் 18 ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிக்கலாவுக்கு போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி! – கட்சியை விட்டு தூக்கி அடித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ்