Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம்

Siva
புதன், 14 ஆகஸ்ட் 2024 (13:30 IST)
சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பெண் காவல்துறை அதிகாரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது உள்பட சவுக்கு சங்கர் மீது மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தன்மீதான 16 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் சார்பில்  மனுத்தாக்கல் செய்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 17 வழக்குகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments