Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை!!
, திங்கள், 18 அக்டோபர் 2021 (11:01 IST)
நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று தென் மாவட்டங்களான 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
குறிப்பாக தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே கனமழை பெய்யும் 7 மாவட்டங்களில் திங்கட்கிழமை இன்று விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
அதன்படி நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் இந்த மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் இன்று ஒரு நாள் திங்கட்கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெலாரூஸ் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரான்ஸ் தூதர்