Publish Date: Fri, 29 Oct 2021 (19:51 IST)
Updated Date: Fri, 29 Oct 2021 (19:54 IST)
கொரொனா கால ஊரடங்கில் கடந்த செப்டம்பரில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
அதில், காலை முதல் மாலை வரை மாணவர்கள் வழக்கம் போல் வகுப்பு நடைபெறும் எனவும், திங்கட்கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் கிழமை விடுமுறை எனவும், பள்ளி வர விருப்பமுள்ள மாணவர்கள் வரலாம், ஆன்லைன் மூலமாகவும் மாணவர்கள் படிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.