Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீவ் விடாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (08:54 IST)
சென்னையில் உத்தரவை மீறி இன்று திறக்கப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை நல்ல மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 
எனவே சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து  சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 
 
ஆனால் ஆட்சியரின் உத்தரவையும் மீறி சென்னையில் சில பள்ளிகள் வழக்கம்போல் இயங்குவதாக புகார் கூறப்பட்டது. 
 
இதனையடுத்து இது குறித்து பேசிய ஆட்சியர் உத்தரவை மீறி இயங்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மழையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு எதாவது ஆனால் பள்ளி நிர்வாகம் தான் பதில் கூற வேண்டும் என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments