Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக நாயகனாக இருந்த கமல்ஹாசன், சிரிப்பு நடிகராக மாறிவிட்டார்: செல்லூர் ராஜூ

Mahendran
செவ்வாய், 12 மார்ச் 2024 (10:55 IST)
சினிமாவில் உலகநாயகனாக இருந்த கமல்ஹாசன் அரசியலில் சிரிப்பு நடிகராக மாறிவிட்டார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை திமுக கூட்டணியில் இணைத்துவிட்டார் என்பதும் அதற்கு பதிலாக அவர் ஒரே ஒரு ராஜ்யசபா தொகுதியை மற்றும் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் ஒரு ராஜ்யசபா சீட்டு கேட்டால் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் கொடுக்க தயாராக இருக்கும்போது ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக எதற்காக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற விமர்சனம் அவர் மீது எழுந்துள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  இதுகுறித்து கூறிய போது சினிமாவில் கமல்ஹாசன் உலகநாயகனாக இருந்தாலும் அரசியலில் அவர் பூஜ்ஜியம் என்பதை அவரது செயல் நிரூபித்து விட்டது

சிரிப்பு நடிகர் வடிவேலுவை காட்டிலும் சிரிப்பு நடிகராக அரசியலில் அவர் மாறிவிட்டார். வாயை வாடகைக்கு விட்டிருந்தால்கூட ஒரு தொகுதியையாவது வென்று இருக்கலாம். ஆனால் இந்த பொழப்புக்கு அவர் இன்னும் இரண்டு படத்தில் நடித்திருக்கலாம் என்று செல்லூர் ராஜூ கடும் விமர்சனம் செய்துள்ளார்

செல்லூர் ராஜுவின் இந்த விமர்சனத்திற்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments