Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் பாரதமே மிகவும் பெருமை கொள்ளும் நாள் இது: சந்திரபாபு நாயுடு

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (19:58 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதன் பின்  ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

`தென் பாரதமே மிகவும் பெருமை கொள்ளும் நாள் இது. சென்னை கடல் அலைகள் மகிழ்ச்சி கொள்ளும் தருணம். இந்திய நாட்டின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதியின் திரு உருவச் சிலையை சென்னை மாநகரில் திறந்துவைத்துள்ளோம். இப்பெரும் விழாவில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எண்பதாண்டு காலம் மக்கள் நல்வாழ்வுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் நமது கருணாநிதி. தமிழகத் திருநாடு போற்றும் அரசியல் தலைவர்.

தமிழகத்தில் திமுகவை வெற்றி பெற செய்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும். எதிர்கால தமிழ் சமுதாயம் கருணாநிதி செய்த நன்மைகளை என்றென்றும் நினைக்கும். ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க பாடுபட்டவர் கருணாநிதி

தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பிரச்னையை எழுப்புகிறது பாஜக அரசு. பணமதிப்பு நீக்கம் பொதுமக்களுக்கு பலன் தரவில்லை. ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலை தந்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments