Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாது விவகாரம்: நாளை மறுநாள் கூடுகிறது தமிழக சட்டமன்றம்

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (20:40 IST)
மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் ஆய்விற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதிக்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் மற்றும் சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments