Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழநி குடமுழுக்கு விழா: சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு

Advertiesment
Train
பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா நாளை மறுநாள் அதாவது ஜனவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் பழனிக்கு சிறப்பு ரயில் குறித்து அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
பழனி குடமுழுக்கு விழாவை ஒட்டி பழனி - மதுரை இடையே முன்பதிவுல்லா சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
 ஜனவரி 26, 27 மற்றும் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தா, கொடைக்கானல் ரோடு ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் ''- நடிகர் கமல்ஹாசன் டுவீட்