Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு மீனவர்கள் 21 பேர் கைது.. மீண்டும் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை..!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (13:47 IST)
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த பல ஆண்டுகளாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவது தொடர் கதை ஆகி உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய மாநில அரசுக்கு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் 13 பேர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும் 8 பேர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் யாழ்ப்பாணம் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments