Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தை இருந்தும் அனாதையான குழந்தை… அநியாயமாக பலியான சிறுமி!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (16:09 IST)
கள்ளக்குறிச்சி அருகே சிறுமியின் குறும்புத்தணம் பொறுக்காமல் பெரியம்மா அடித்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்விழி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராணிக்கும் அவர் கணவருக்கும் பிரின்ஸி என்ற 5 வயது மகள் இருந்துள்ளார். சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் தந்தை வேறொரு திருமணம் செய்துகொண்டார். இதனால் சிறுமி தனது பெரியம்மா வளர்ப்பில் இருந்துள்ளார்.

சிறுமியை வளர்த்த பெண்ணுக்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும் சிறுமி செய்யும் குறும்புகள் சேட்டைகளால் அவர் அடிக்கடி கோபமாகி சிறுமியை அடிப்பது வழக்கம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல சிறுமி, சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்க கோபத்தில் அருகில் இருந்த கம்பை எடுத்து அடித்துள்ளார் அந்த பெண். இதில் அழுது அழுது சிறுமிக்கு மூச்சுத்திணறலே வந்துள்ளது. இதனால் மயக்கமடைந்த பிரின்ஸியை மருத்துவமனையில் சேர்க்க செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments