Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு..!

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (08:52 IST)
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கொண்டு  ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 
 
வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதால் சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் உள்ள கரையோர மாவட்டங்களில் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும் படியும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments