Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயார் கண்முன் மாணவியை ' பெல்டால்' தாக்கிய கும்பல்!

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (20:07 IST)
கோவை குனியமுத்தூர் அண்ணா காலனியில் வசிப்பவர் கல்லூரி மாணவி (20). இவர் தனது ஆண்நண்பர்கள் 2 பேருடன் இரு சக்கரவாகனத்தில் சென்றுளார். ஆத்துப்பாலம் மரக்கடை அருகே அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் கல்லூரி மாணவியை வாகனத்தில் இருந்து இறக்கி, அவரது வீட்டுக்கு போகும்படி மிரட்டியதாகத் தெரிகிறது.
அதனால் கோபம் அடைந்த மாணவியின் இரு ஆண் நண்பர்கள் , அந்த கும்பலிடம் கேள்வி கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
 
பின்னர், அந்த கும்பல் மாணவியின் விட்டுக்குச் சென்று, மாணவியின்  தாயார் கண்முன்னே நீ இவனை காதலிக்கிறாயா என்று கேட்டு, பெல்டால் அடித்துள்ளார். மேலும் அந்த 2 ஆண் நண்பர்களையும் அடித்து உதைத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். 
 
இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவி, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் கரும்புக்கடையைச் சேர்ந்த சபியுல்லா, குனியமுத்தூரை சேர்ந்த முகமது இப்ராஹீம் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. கல்லூரி மாணவியை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

நெற்றியில் பொட்டு இல்லை.! விஜய்யின் புகைப்படம் மாற்றம்..! இதுதான் காரணமா.?

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments