Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்ட மைய நூலக உறுப்பினர்களாக இணைந்த மாணவர்கள்

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (23:44 IST)
பரணிபார்க் கல்விக் குழும மாணவர்கள் 1000 பேர் மாவட்ட மைய  நூலக உறுப்பினர்களாக இணைந்தனர்

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான சுயமுன்னேற்ற பயிற்சி வகுப்பினை பரணிபார்க் கல்வி குழுமம் மற்றும் பொது நூலகத்துறை கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தினர். மேலும்   பரணிபார்க் கல்விக் குழும மாணவர்கள் 1000 பேர் மாவட்ட மைய நூலக உறுப்பினர்களாக இணைந்தனர்
 
இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு கதிர், பயிற்றுநர், எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தார். பரணி பார்க் கல்வி குழுமத்தின் தாளாளர் மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன், மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் மற்றும் வாசகர் வட்ட தலைவர் மாவட்ட மைய நூலகம் தீபம் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

இந்நிகழ்ச்சியினை பரணி வித்யாலயா பள்ளி மாணவர் மன்ற மாணவ பிரதிநிதிகள் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் 1000 நூலக உறுப்பினர் அட்டைகளை சிறப்பு விருந்தினரிடமிருந்து மாணவ பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதல்வர் சுதாதேவி மற்றும் துணை முதல்வர் பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments