Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியிடம் இது இல்லாததால் அரசியல் செய்ய முடியாது: சுப்பிரமணியம் சுவாமி

Webdunia
சனி, 20 மே 2017 (04:01 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்துவிட்ட நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பேசிய சுப்பிரமணியம் சுவாமி, 'ரஜினி ஒரு ஊழல் நடிகர் என்றும். அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் ரஜினிக்கு அரசியல் பற்றிய அறிவு கிடையாது என்றும் அவ்ருக்கு முதல்வராக தகுதி அவருக்கு இல்லை என்றும் கூறினார்



 


இந்த நிலையில் மீண்டும் நேற்று பெங்களூரில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ரஜினிக்கு பாஜக கட்சியில் இடம் கொடுக்கக் கூடாது. மேலும் அவரிடம் உறுதியான கருத்து கிடையாது. ஒரு நாள் ஒன்றை சொல்வார். அடுத்த நாள் அதை மாற்றிப் பேசுவார். ஒரு நாள் ஜெயலலிதாவை எதிர்த்து பேசுவார்.
மறுநாள் அவருக்கே ஆதரவை தெரிவிப்பார். ரஜினி இப்படி ஸ்திரமாக அரசியல் செய்ய முடியாததற்கு காரணம், அவருக்கு படிப்பறிவு கிடையாது என்பதுதான்.” என சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

கடந்த முறை ரஜினி ஊழல் நடிகர் என்றும் அரசியல் அறிவு கிடையாது என்றும் பேசிய சுவாமி இம்முரை படிப்பறிவு இல்லை என்று கூறியுள்ளதால் ரஜினி ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர். பிரதமர் மோடி எந்த பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றார் என்று பதில் சொல்லுமாறு டுவிட்டரில் ரஜினி ரசிகர்கள் எதிர்கேள்வி கேட்டு வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments