Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுருக்குமடி வலைகளில் மீன் பிடிக்கலாம்! ஆனால்..? – உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (12:03 IST)
சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழ்நாடு அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடலோர பகுதியை சேர்ந்த மக்களின் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்து வரும் நிலையில் மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது.

சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதால் ஏராளமான மீன்கள் பிடிக்கப்படுவதாலும், இது மற்ற மீனவர்களுக்கும், மீன்வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இந்நிலையில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. அதன்படி, வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி வலையில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படும்.

சுருக்குமடி வலையில் மீன்பிடிப்பவர்கள் காலை 8 மணிக்கு கடலுக்குள் சென்று மாலை 6 மணிக்குள் திரும்பிவிட வேண்டும். 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும்.

பதிவு செய்த படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட படகுகளில் முறையாக ட்ராக்கி சிஸ்டம் பொருத்தியிருக்க வேண்டும். சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்கள் முறையான அடையாள அட்டை வைத்திருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments