Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் பாதுகாப்பு கோரிய சூர்யா சிவாவின் மனு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் அதிரடி..!

Mahendran
வியாழன், 15 பிப்ரவரி 2024 (15:34 IST)
தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என பாஜக பிரமுகர் சூர்யா சிவா மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
 
பொதுமக்கள் சேவைக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்யும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்த பின் நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்த போது ’இப்போதெல்லாம் ஒருவர் இரண்டு போலீஸ் பாதுகாப்பு வைத்துக் கொள்வது பேஷன் ஆக மாறிவிட்டது’ என்று தெரிவித்துள்ளார். 
 
இந்த மனு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் ’குற்ற வழக்குகள் சூர்யா சிவா மீது இருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments