Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஓட்டல்களில் திடீரென குவிந்த கூட்டம்! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (20:18 IST)
சென்னை உள்பட பெருநகரங்களில் தற்போது வீடுதேடி உணவு சப்ளை செய்யும் ஸ்வக்கி நிறுவனத்தை தான் பெரும்பாலானோர் நம்பியுள்ளனர்.  கணவன், மனைவி இருவரும் வேலை செய்யும் வீட்டில் பெரும்பாலும் டின்னர் ஸ்வக்கியை நம்பித்தான் உள்ளது. ஆன்லைன் செயலி மூலம் தேவையான உணவை ஆர்டர் செய்தால் அதிகபட்சம் அரை மணி நேரத்தில் வீடு தேடி உணவு வந்துவிடும்

இந்த நிலையில் இன்று முதல் திடீரென ஸ்வக்கி டெலிவரி பாய்ஸ் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இதுவரை 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.36 ரூபாய் ஊதியமாக அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென ஒரு ரூபாய் குறைத்து ரூ.35ஆக குறைக்கப்பட்டதாகவும், மேலும் 4 கிலோமீட்டருக்கு அதிகமான தொலைவுக்கும் ஊதியம் கணிசமாக குறைக்கப்பட்டதாகவும் கூறி ஸ்வக்கி டெலிவரி பாய்ஸ் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக ஸ்வக்கி செயலியில் செய்யப்பட்ட ஆர்டர்கள் சப்ளை ஆகவில்லை என்பதால் சென்னைவாசிகள் இன்று திண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி வேறு வழியின்றி ஓட்டல்களில் பொதுமக்கள் நேரடியாக செல்வதால் பெரிய ஓட்டல்களில் இன்று வழக்கத்தை விட அதிக கூட்டம் இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments