Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு தெரியுமா?

Advertiesment
தமிழகம்
, வியாழன், 28 ஏப்ரல் 2022 (13:02 IST)
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

 
தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் தற்போது வெளியான அறிவிப்பில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 
 
மேலும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரம், ராமநாதபுரம், கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் பரவும் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று!