Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழ்நாட்டில் பரவலாக மழை

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழ்நாட்டில் பரவலாக மழை
, செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (10:24 IST)
தென்மேற்கு பருவக்காற்றால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகமான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்பு. அதேபோல, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
 
தற்போது தென்மேற்கு பருவக்காற்றால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு முற்றிலும் தடை – மு.க.ஸ்டாலின் உறுதி!