Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்திற்கு தொடர் மழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

தமிழகத்திற்கு தொடர் மழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
, வெள்ளி, 4 நவம்பர் 2022 (10:20 IST)
தமிழகத்தில் நவம்பர் 8-ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.


வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் இன்று 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்திலுள்ள விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை சிவகெங்கை உள்பட 7 ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 8-ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதோடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து சரியும் தங்கம் விலை: இன்று ஒரே நாளில் இவ்வளவு சரிவா?