Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு தான் அதிக தமிழ்ப்பற்று இருக்கிறது: தமிழிசையின் அடடா விளக்கம்!

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (15:29 IST)
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19-ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். ஆனால் வரலாற்றில் முதன் முறையாக பட்ஜெட்டை இந்தியில் படித்தார் அவர்.
 
இந்தியில் பட்ஜெட் படிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
 
மற்ற மாநிலங்களுக்காகவே பட்ஜெட் உரை தமிழில் வாசிக்கப்பட்டது. பட்ஜெட் உரையின் பிரதி தமிழிலும் அச்சிடப்பட்டுள்ளது. எனவே இதனை அரசியலாக்க வேண்டாம். மொழியை வைத்து அரசியல் செய்வதை தமிழக இளைஞர்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.
 
பாஜக ஆட்சியில் தமிழ் இன்னும் ஓங்கி ஒலிக்கும். மற்ற கட்சிகளை காட்டிலும் பாஜகவுக்கு தான் தமிழ்ப்பற்று அதிகம் இருக்கிறது. தமிழ் பற்றாளர்களில் வைகோவுக்கு பாஜக தலைவர்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என தமிழிசை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments