Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது தாமரை கோலத்த அழிச்சுட்டீங்களா..? பொங்கி எழுந்த தமிழிசை!

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (16:38 IST)
தாமரை வடிவில் போடப்பட்ட கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்ததால் கோபப்பட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வரையப்பட்ட கோலங்களில், தாமரை வடிவத்திலான கோலங்கள் இருந்த்தால் இது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக அந்த கோலங்களை அழித்துள்ளனர். 
 
இதற்கு தமிழிசை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வரையப்பட்ட தாமரை கோலத்தை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். 
தாமைரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்திருக்கின்றனர். இது தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல. அப்படி பார்த்தால், கை ஒரு கட்சியின் தேர்தல் சின்னம், அதற்காக கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? 
 
தினமும் சூரியன் உதிக்கின்றது. சூரியனும் ஒரு கட்சியின் தேர்தல் சின்னம். எனவே சூரியனை மறைத்து விடுவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments