Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க இதுதான் நேரம்! – குழு அமைத்த எடப்பாடியார்!

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (12:59 IST)
கொரோனா நடவடிக்கைகளால் வெளிநாடுகளில் தொழில் செய்யமுடியாமல் வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க முதல்வர் குழு அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பலி கொண்டுள்ளது ஒருபக்கம் இருக்க, மறுபுறம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டுவித்துள்ளது கொரோனா. இதனால் பல நாடுகளில் நிறுவனங்கள் நசிவடைய தொடங்கியுள்ளன.

பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் பல நாடுகளில் முதலீடு செய்து தொழில் செய்து வரும் நிலையில், கொரோனா தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பலவற்றில் பெரும் நஷ்டத்தை சந்தித்ததை தொடர்ந்து பல நிறுவனங்கள் பின்வாங்க தொடங்கியிருக்கின்றன. அப்படியாக பின்வாங்கும் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் செய்ய ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகமுமே பெரும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் புதிய நிறுவனங்களை ஈர்ப்பது பொருளாதார ரீதியாக தமிழகம் சரிவை சந்திக்காமல் இருக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments