Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ரேஷன் கடைகளில் இனி தரமான அரிசி! – அமைச்சர் சக்ரபாணி உறுதி!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (12:15 IST)
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.

இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றவையாக உள்ளது குறித்து சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தமிழகம் முழுவதும் 2,13,80,112 குடும்ப அட்டைகள் உள்ளன. அனைத்து மக்களுக்கும் ரேஷன் மூலம் தரமான அரிசியை வழங்க அரசு உறுதியேற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் அரிசி ஆலைகளில் ”கலர் ஷேடிங்” என்ற அரிசி தரம் பிரிக்கும் இயந்திரத்தை நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மக்களுக்கு தரமான அரிசி கிடைக்கும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments