Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மூக்கையும் நுழைப்பேன்; காலையும் பதிப்பேன்! – தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடி!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (09:17 IST)
தன்னை குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழகத்தில் தனது ஈடுபாடு குறித்து பேசியுள்ளார்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். தற்போது தெலுங்கானா மாநில ஆளுனராகவும், புதுச்சேரியின் கூடுதல் சிறப்பு ஆளுனராகவும் தமிழிசை சௌந்தர்ராஜன் பொறுப்பு வகித்து வருகிறார்.

ஆளுனராக தமிழிசை சௌந்தர்ராஜனின் செயல்பாடுகளை விளக்கும் புத்தகம் ஒன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு பேசினார்.

ALSO READ: கனமழை எதிரொலி: பள்ளிகள் எந்தெந்த மாவட்டத்தில் விடுமுறை?

அப்போது அவர் “எனது பணியில் நான் யாருக்கும் இடையூறு செய்ததில்லை. ஆனால் ஆட்சியாளர்கள் சிலர் நான் இடையூறு செய்வதாக தவறாக கருதுகிறார்கள். குடியரசு தினத்தன்று தெலுங்கானா மாநிலத்தில் என்னை கொடியேற்ற விடவில்லை. ராஜ்பவன் வளாகத்தில்தான் நான் கொடி ஏற்றினேன்.

தெலுங்கானாவில், புதுச்சேரியில் என்னை ஒதுக்கிவிட்டார்களா? என கேட்கிறார்கள். என்னை செதுக்கியவர்களைவிட ஒதுக்கியவர்கள் அதிகம். இப்போது கூட தமிழ்நாட்டில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள் என கேட்கிறார்கள். தமிழகத்தில் மூக்கு, தலை, வாலையும் நுழைப்பேன். என் காலையும் பதிப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது. தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட நான் தயங்கமாட்டேன்” என கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments