Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதுபாட்டில்கள் கொள்ளை: திருச்சியில் பரபரப்பு

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (19:17 IST)
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தமிழகத்தில் அத்தியாவசிய தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இதில் டாஸ்மாக் கடைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டாஸ்மாக் கடை கடந்த 5 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருப்பதால் குடிமகன்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு சிலர் கள்ள மார்க்கெட்டில் மது வாங்கி குடித்த நிலையில் தற்போது அதுவும் காலியாகி விட்டதால் செய்வதறியாது திகைத்து உள்ளனர்
 
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை கொள்ளை அடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மது பாட்டில்களை உடனடியாக கொடோனுக்கு மாற்றவேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் பயந்தது போலவே திருச்சி அருகே உறையூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இனிமேலாவது உடனடியாக தமிழக அரசு செயல்பட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் உள்ள மதுபாட்டில்களை உடனடியாக பாதுகாப்பான குடோனுக்கு மாற்ற வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments