Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழை விட தெலுங்கு பேசுபவர்களே அதிகம்: அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (08:26 IST)
உலகிலேயே மூத்த மொழி தமிழ்தான் என்பது கீழடியில் கிடைத்து கொண்டிருக்கும் ஆதாரங்கள் மெய்ப்பித்து வருவதால் தமிழ் மொழியின் பெருமை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நிலையில் உலகில் தமிழை விட தெலுங்கு பேசுபவர்களே அதிகம் என தமிழக தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில், சென்னை ஆழ்வார்பேட்டையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில்  அமைச்சர் பாண்டியராஜன்பேசியதாவது:

தமிழ், தெலுங்கு சமுதாயத்திற்கு இடையேயான பிணைப்பு குறைந்துள்ளது என்றும், உலகம் முழுவதும் தமிழை விட, தெலுங்கு மொழியை ஒன்றரை கோடி மக்கள், அதிகம் பேசுகிறார்கள் என்றும் தெரிவித்தார். தெலுங்கானா தமிழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

தெலுங்கு மொழி இரண்டு மாநிலங்களில் பேசப்பட்டு வந்தாலும் உலகின் பல நாடுகளில் பேசப்பட்டு வரும் தமிழைவிட தெலுங்கு மொழியை ஒன்றரை கோடி பேர் அதிகம் பேசுவதாக அமைச்சர் பேசியிருப்பதை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments