Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் மருந்து வணிகத்தினை தடை செய்ய வேண்டும் : கரூரில் மருந்து வணிகர் நல சங்கத்தினர் ஆர்பாட்டம்

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (18:46 IST)
இந்தியா முழுவதும் ஆன்லைன் மருந்து வணிகத்தினை தடை செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி கரூரில் மருந்து வணிகர் நல சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட மருந்துவணிகர் நல சங்கத்தின் சார்பில் ஆன்லைன் மருந்து வணிகத்தினை தடை செய்யக்கோரி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. 
 
இந்த ஆர்பாட்டத்திற்கு கரூர் மாவட்ட மருந்து வணிகர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் விமலா மெடிக்கல் திருஞானம் தலைமை தாங்கினார்.
 
மேலும் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அனிலா ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஆர்பாட்ட முடிவில் மாவட்ட பொருளாளர் தன்வந்திரி பாலு நன்றியுரையாற்றினார். 
 
இந்த ஆர்பாட்டத்தில் கரூர் மாவட்ட மருந்து வணிகர் நல சங்கத்தின் முன்னாள் செயலாளரும், சங்கத்தின் கெளர ஆலோசகர் மேலை.பழநியப்பன்., கரூர் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ராஜூ., கரூர் மாவட்ட வர்த்தக சங்க செயலாளர் கே.எஸ்.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசு உடனடியாக ஆன்லைன் மருந்து வணிகத்தினை தடை செய்வதோடு, அதன் மூலம் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மருந்து வணிகர்களை காக்க வேண்டுமென்றும், ஒரு முறை தடை பின்பு தடையை அகற்றுதல் என்று சென்று கொண்டே இருப்பதால் உடனடியாக போர்கால நடவடிக்கை எடுத்து, ஆன்லைன் வர்த்தகத்தினை உடனடியாக தடை செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. 
சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments