Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தை கட்டிப்பிடித்து அழுத ஓட்டுனர்....ஓய்வு பெறும் நாளில் நெகிழ்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (16:11 IST)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலூகாவைச் சேர்ந்த  முத்துப்பாண்டி அரசுப் பேருந்து ஓட்டுனராக  பணியாற்றி வந்த நிலையில்,  நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார். அவர் பேருந்தை தொட்டு வணங்கி  அழுத வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலூகாவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் திருப்பரங்குன்றம் அரசுப்பேருந்து பணிமனையில் ஓட்டுனராகப் பணியாற்றி வந்த நிலையில், நேற்று அனுப்பானடியில் இருந்து மகாலட்சுமி  காலணி செல்லும் பேருந்தை கடைசியாக ஓட்டி தந்து பணியை நிறைவு செய்தார்.

30  ஆண்டுகளாக ஓட்டுனராகப் பணியாற்றிய முத்துப்பாண்டி, நேற்று  பேருந்து நிலையத்திற்குள் பேருந்தை கொண்டு சென்ற பின்னர்,  இருக்கையில் அமர்ந்து பேருந்தின் ஸ்டியரிங், பிரேக் ஆகியவற்றை கையால் தொட்டுப்பார்த்து முத்துப்பாண்டி வணங்கினார்.

அதன்பின்னர், கீழிறங்கி வந்த அவர், பேருந்தின் முன்பக்கத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments