Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் எப்போது? மே 29ல் பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம்

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் எப்போது? மே 29ல் பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம்
, ஞாயிறு, 23 மே 2021 (09:11 IST)
2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதுவரை 50 போட்டிகள் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் 51வது போட்டிகளில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட் அல்லது இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் மே 29-ஆம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் மும்பையில் நடைபெற இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
அனேகமாக ஐபிஎல் போட்டிகளில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில்தான் நடைபெறும் என்றும் செப்டம்பர் அல்லது அக்டோபர் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 29-ஆம் தேதி பிசிசிஐ கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலம், தஞ்சை, கோவையிலும் பரவும் கருப்பு பூஞ்சை: மக்கள் அச்சம்