Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சீமானின் கோபம் சரியானதே, ஆனால்”.. சர்ச்சை பேச்சு குறித்து திருமா

Arun Prasath
புதன், 16 அக்டோபர் 2019 (12:19 IST)
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது சரியே என்பது போல் பேசி சர்ச்சையை கிளப்பிய சிமான் குறித்து, திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விக்கிரவாண்டி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது சரி என்பது போல் பேசினார்.

இதனை தொடர்ந்து சீமான் மீது, தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைத்தல், வன்முறையை தூண்டுவது போல் பேசுதல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்து அதிமுகவினரும் காங்கிரஸாரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய அமைதிப்படைக்கு எதிரான சீமானின் கோபம் சரி தான், ஆனால் விடுதலை புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை கூறும்போது சீமான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து தற்போது சீமான், அதிமுக அமைச்சர்கள் ”அலிபாபாவும் 40 திருடர்கள் போல” என மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments