Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.என்.நேரு, வீரபாண்டி ராஜாவை அடுத்து குறி வைக்கப்பட்ட திருச்சி சிவா: முக ஸ்டாலின் அதிரடி

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (18:59 IST)
குறி வைக்கப்பட்ட திருச்சி சிவா
திருச்சி மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக இருந்த கே.என்.நேரு டம்மி ஆக்கப்பட்டு அந்த பதவிக்கு சமீபத்தில் அன்பில் மகேஷ் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டு என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது கேஎன் நேரு, வீரபாண்டி ராஜாவை அடுத்து திருச்சி சிவா குறி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி சிவாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் அவருக்கு பதிலாக ஒரு இள ரத்தம் ஒருவரை ராஜ்யசபா எம்பி பதவிக்கு நியமனம் செய்ய முக ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
திமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெறுவதற்கு முக ஸ்டாலின் மட்டும் காரணமல்ல என்றும் பிரசாந்த் கிஷோரின் ஐடியாவும் காரணம் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் திமுக கோஷ்டிப் பூசல்கள் களை எடுக்கப்பட்டு புத்துணர்ச்சியுடன் வரும் தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

வனக் கல்லூரியில் 27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டியை - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments