Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.. நீங்க சரக்குல திருக்குறளா அச்சிட்டு வித்தீங்க? – சட்டசபையில் காரசார விவாதம்!

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (13:50 IST)
தமிழகத்தில் மது விற்பனை குறித்து தமிழக சட்டசபையில் எழுந்த கேள்வி வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபையின் இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்துள்ளது குறித்த விவாதம் எழுந்தது.

கடந்த ஆண்டுகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பேசிய திமுக எம்.எல்.ஏ “மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடு என மது பாட்டில்களில் அச்சடித்துவிட்டு அதை அரசே விற்பனை செய்கிறது என்று குற்றம்சாட்டினார்.

அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தங்கமணி ”2006 – 2011 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இருந்தபோதும் மது விற்பனை இருந்தது. அப்போது மதுப்பாட்டில்களில் திருக்குறளையா அச்சிட்டு விற்பனை செய்தீர்கள்?” என்று கேள்வியெழுப்பினார். இதனால் சிறிதுநேரம் சட்டசபை பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments