Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கள்ளுக்கடை.. ரேசனில் சீனிக்கு பதில் கருப்பட்டி.. அண்ணாமலை வாக்குறுதி..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (07:37 IST)
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் கள்ளுக்கடை திறக்கப்படும் என்றும் அதேபோல் ரேசனில் சீனிக்கு பதிலாக கருப்பட்டி வழங்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குறுதி அளித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  பாதயாத்திரை செய்து வருகிறார் என்பதும் அவர் செல்லும் இடங்கள் எல்லாம்  பொதுமக்கள் பெரும் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. 
 
இந்த நிலையில் ராமநாதபுரம் பரமக்குடியில் பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செய்த போது உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷனில் ரேஷன் கடைகளில் சீனிக்கு பதிலாக பனங்கருப்பட்டி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் அண்ணாமலை இந்த வாக்குறுதியை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments