Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் விடுதலை: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (11:39 IST)
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அடுத்து 10 வருடங்கள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபோது 'பேரவை நடைபெற்றுவரும் நிலையில் ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் விடுப்பை பேரவையில் அறிவிக்காதது ஏன்? என்றும் இந்த தகவலை செய்தி வெளியீடாக அறிவித்துள்ளது மரபுதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
ஆனால் இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிக்கையில், 'உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கவர்னருக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இந்த 67 பேர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. விடுதலை செய்யப்படும் 67 பேர்கள் கொண்ட பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments