Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்! – எடப்பாடியார் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (14:46 IST)
தமிழகத்தில் அனைவரும் இ-பாஸ் பெறும் வகையில் தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்காததாலும், இ-பாஸ் பெற்று தர இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் அதிகரித்துள்ளதாலும் இ-பாஸ் நடைமுறைகளை நீக்கவோ அல்லது எளிமைப்படுத்தவோ வேண்டும் என மக்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

இந்நிலையில் இ-பாஸ் நடைமுறைகளில் புதிய தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி ஆகஸ்டு 17 முதல் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி வழங்கப்படும். இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டு எண், ரேசன் கார்டு எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை இணைத்தால் உடனடி இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் தொழில்ரீதியான மற்றும் தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டும் மக்கள் இ-பாஸ் சேவையை பயன்படுத்துமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments