Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு குட்கா கடத்தல்! – 4 பேர் கைது!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (13:02 IST)
கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்திற்கு குட்கா கடத்த முயன்ற நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும் முறைகேடாக பல பகுதிகளில் விற்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதுடன், குட்கா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரியில் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை 6.5 டன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த காவல்துறை ரூ.60 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments