Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Rain
, வியாழன், 21 செப்டம்பர் 2023 (08:41 IST)
தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. 
 
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஒரு சில நகரங்களில் மழை பெய்யும் என்று நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு என்றும் மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக சென்னையில் மட்டுமின்றி பல பகுதிகளில் மழை பெய்யும் என்பதும் அதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் அதற்கேற்றவாறு தங்களது  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழை எதிரொலி.. ஒரே ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!