Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Advertiesment
தமிழகம்
, சனி, 5 ஆகஸ்ட் 2023 (15:22 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது என்பதும் மீண்டும் கோடை காலம் வந்துவிட்டதோ என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு அதிக அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. 
 
மேலும் அதிகபட்சமாக 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை தமிழகத்தில் வெப்பம் பதிவாக கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தி மீது நம்பிக்கை இருந்தால், தமிழை அலுவல் மொழிகளாக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? ராமதாஸ்