Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் 20 நாட்கள் கழித்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
, திங்கள், 25 ஏப்ரல் 2022 (07:15 IST)
சென்னையில் கடந்த 20 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை அதிகமாக உயர்ந்து 110 ரூபாயை தாண்டியது என்பதும் அதேபோல் டீசல் விலையும் 100 ரூபாயை தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வரியை குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 
 
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50.95 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!