Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை 10 மணிக்குள் எங்கெல்லாம் மழை பெய்யும்: சென்னை உள்பட 8 மாவட்டங்கள்..!

Siva
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (07:35 IST)
இன்று காலை 10 மணிக்குள் சென்னை உள்பட எட்டு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைத்தளத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தென்காசி, தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்றும் எனவே மேற்கண்ட எட்டு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொளத்தூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்கம்.! தமிழக அரசு அறிவிப்பு..!!

பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரம்.! முன்னாள் டீன் அதிரடி சஸ்பெண்ட்..!!

மரண தண்டனை மசோதாவுக்கு ஒப்புதல் தராவிட்டால்.. ஆளுனருக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

ரிலையன்ஸ்- டிஸ்னி இணைப்புக்கு அனுமதி.. அடுத்தது என்ன?

ஓசூர் டாட்டா மின்னணு நிறுவனத்தில் உத்தர்காண்ட் பெண்களுக்கு வேலை: பாமக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments