Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிலோ ரூ.40 - மார்கெட்டில் தக்காளி விலை மேலும் குறைந்தது!!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (10:24 IST)
தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது. 

 
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்தது.
 
இதனால் தக்காளி விலை தொடர்ந்து விலை உயர்ந்தது. வடமாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் தவிர ஏனைய சில காய்கறிகளும் விலை உயர்ந்தது. தக்காளி வேகமாக விலை உயர்ந்து கிலோ ரூ.120ஐ தொட்டது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120-ல் இருது ரூ.80 வரை கணிசமாக குறைந்த நிலையில் தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.80 வரை விற்ற நிலையில், இன்று கிலோ ரூ.40க்கு விற்பனை ஆகிறது. வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments